கிளாம்பாக்கத்திலிருந்து.. விருப்பம் போல் பயணம் செய்ய.. இன்று முதல் மாதாந்திர பயண அட்டை விற்பனை!

Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை 1000 ரூபாய் மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.


சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது .இது கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. 




இந்தப் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு  பெருமளவில் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.


இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர பயண சலுகை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. பேருந்துகளில் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்ய, ரூபாய் 1000 மதிப்புள்ள பஸ் பாஸ் ஐ மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான 50 சதவிகித சலுகை பயண அட்டையையும் மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். 


மூத்த குடிமக்களுக்கான 60 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயண அட்டையுடன் 10 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்