சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை 1000 ரூபாய் மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது .இது கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு பெருமளவில் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர பயண சலுகை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. பேருந்துகளில் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்ய, ரூபாய் 1000 மதிப்புள்ள பஸ் பாஸ் ஐ மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான 50 சதவிகித சலுகை பயண அட்டையையும் மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான 60 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயண அட்டையுடன் 10 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}