வட்டு எழுத்து தமிழ் என்பது என்ன?

Feb 03, 2026,02:43 PM IST

- கலைவாணி கோபால்


கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பயன் பாட்டில் இருந்த நிலையில் தற்போது இவ்வித எழுத்துக்கள் கல்வெட்டுகளில் மட்டுமே காண முடிகிறது. 


முதன் முதலில் தமிழ் மற்றும் பிராமி எழுத்தில் இருந்து தோன்றியது வட்டெழுத்து என்று டி. ஏ. கோபிநாத ராவ் அவர்கள் கண்டறிந்து இவர் கருத்தை பதிவிட்டார். ஆனால் அதை நிரூபிக்க சான்றுகள் எதுவும் இவரிடம் இல்லாததால், அவருடைய கருத்து நிலுவையிலே வைக்கப்பட்டது. 


ஆனால், தற்போது கிடைக்கப்பெற்ற பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசாலபுரம், அரச்சலூர், போன்ற ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராயும் போது தமிழில் மற்றும் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி  வட்டெழுத்து என்றும் கருத்து நிலவி வருகிறது. 


மேலும்,  கி.பி .ஏழாம் நூற்றாண்டு வரை இந்த எழுத்துக்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது என்றால் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நடுக்கல் எடுக்கவும்,




முற்கால பாண்டியர்கள் அரசாணை பிறப்பிக்கவும்,( செம்பாலான தகடுகள்) செப்பெடுகளில் ஆவணங்கள் பதிவு செய்யவும், இவ்வித எழுத்துக்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவை ...பாண்டியர்கள் மட்டுமல்லாமல் சேர, சோழர் என்று முப்பெரும் வேந்தர்களாலும் இந்த வட்ட எழுத்தை பயன்படுத்தி  வந்துள்ளனர். என்பது  கல்வெட்டுகளின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மேலும்,.. இவ்வெழுத்துக்களை தெ க்கன், கோலெழுத்து இன்று வேறு பெயர்களிலும் குறிப்பிடப்படுகின்றது. 




பெரும்பாலான கோயில் கல்வெட்டுகளில் அக்காலத்தில் அதாவது கி.பி .பத்தாம் நூற்றாண்டு வரை எழுத்துக்களில் அவர்கள் பயன்பாட்டில் பயன் படுத்தி வந்துள்ளனர், கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இவ் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொன்மை மாறி தற்கால தமிழாக வழிவெடுத்து உள்ளது என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களை கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்