- கலைவாணி கோபால்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பயன் பாட்டில் இருந்த நிலையில் தற்போது இவ்வித எழுத்துக்கள் கல்வெட்டுகளில் மட்டுமே காண முடிகிறது.
முதன் முதலில் தமிழ் மற்றும் பிராமி எழுத்தில் இருந்து தோன்றியது வட்டெழுத்து என்று டி. ஏ. கோபிநாத ராவ் அவர்கள் கண்டறிந்து இவர் கருத்தை பதிவிட்டார். ஆனால் அதை நிரூபிக்க சான்றுகள் எதுவும் இவரிடம் இல்லாததால், அவருடைய கருத்து நிலுவையிலே வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது கிடைக்கப்பெற்ற பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசாலபுரம், அரச்சலூர், போன்ற ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராயும் போது தமிழில் மற்றும் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி வட்டெழுத்து என்றும் கருத்து நிலவி வருகிறது.
மேலும், கி.பி .ஏழாம் நூற்றாண்டு வரை இந்த எழுத்துக்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது என்றால் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நடுக்கல் எடுக்கவும்,

முற்கால பாண்டியர்கள் அரசாணை பிறப்பிக்கவும்,( செம்பாலான தகடுகள்) செப்பெடுகளில் ஆவணங்கள் பதிவு செய்யவும், இவ்வித எழுத்துக்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவை ...பாண்டியர்கள் மட்டுமல்லாமல் சேர, சோழர் என்று முப்பெரும் வேந்தர்களாலும் இந்த வட்ட எழுத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். என்பது கல்வெட்டுகளின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மேலும்,.. இவ்வெழுத்துக்களை தெ க்கன், கோலெழுத்து இன்று வேறு பெயர்களிலும் குறிப்பிடப்படுகின்றது.

பெரும்பாலான கோயில் கல்வெட்டுகளில் அக்காலத்தில் அதாவது கி.பி .பத்தாம் நூற்றாண்டு வரை எழுத்துக்களில் அவர்கள் பயன்பாட்டில் பயன் படுத்தி வந்துள்ளனர், கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இவ் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொன்மை மாறி தற்கால தமிழாக வழிவெடுத்து உள்ளது என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களை கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பார்ப்பவர்கள் கண்களைப் பொறுத்தது அழகு.. Beauty is in the eye of the beholder
எனக்கு நானே.. பேசிக் கொள்கிறேன்.. I talk to myself when..!
உண்ட மயக்கம் கண்ணு சொக்குதா.. வாங்க கலகலன்னு சிரிக்கலாம்!
திறமை!
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
சட்டப்படி வாழ்க்கை நடத்த இன்றைய தினத்தை கொண்டாடுவோமா?
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
{{comments.comment}}