சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் மற்றும் சுவாரஸ்யமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.
"கடன் வாங்க எல்லை உண்டு" - ஓ.பி.எஸ் பேச்சு:
சட்டப்பேரவையில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அரசின் கடன் வாங்கும் வரம்பு குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார். "எந்த ஒரு அரசும் தன்னுடைய விருப்பப்படி நினைத்த மாத்திரத்தில் கடன் வாங்கிவிட முடியாது; கடன் வாங்குவதற்கு என்று சில குறிப்பிட்ட சட்டப்பூர்வ எல்லைகள் இருக்கின்றன. தற்போதைய அரசு நினைத்தாலும் அந்த எல்லையைக் கடந்து கடன் வாங்க முடியாது. எனவே, மாநிலத்தின் நிதிநிலைமை மற்றும் கடன் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டக் கூடாது" என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம்:

தொடர்ந்து பட்ஜெட் குறித்துப் பேசிய ஓ.பி.எஸ்., "தற்போதைய தவெக அரசின் நிதிநிலை அறிக்கை வெறும் பெயர் மாற்றப் பட்டியலாகவே வெளியாகியுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் 'திராவிட மாடல்' திட்டங்களாகவே ஜொலிக்கிறது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு இருக்கலாம்; இது பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது" எனக் விமர்சித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி:
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "நீங்கள் இடம் மாறி உட்கார்ந்திருக்கிறீர்கள், பரவாயில்லை; ஆனால் அதற்காக இவ்வளவு தூரம் துதிபாட வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்டார். மேலும், "எந்த ஒரு அரசாங்கத்தாலும் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதத்திலேயே சரித்திரம் படைத்துவிட முடியாது; அப்படி முடிந்தது என்றால் சொல்லுங்கள்" என்று அவர் ஓ.பி.எஸ்-ஸின் விமர்சனத்திற்குப் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் சிரிப்பலை:
அமைச்சரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அரசியலில் அந்த இடத்தை முதன்முதலில் மாற்றியவரே செங்கோட்டையன் தான் என்பதை நான் இங்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டினார்.
நிதிநிலை அறிக்கை மீதான இந்த விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இடையே நடைபெற்ற இந்த கருத்து மோதல்களும் சுவாரஸ்யமான பதிலடிகளும் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
Short and Cute story: தோசை பால்!
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்
மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!
Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
{{comments.comment}}