அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

Aug 11, 2026,05:18 PM IST

- இரா.ஸ்ரீப்ரியா


திருக்குறள்


“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.”


பொருள்:


தவறில்லாமல் நன்றாகக் கற்றுக் கொண்டு, கற்றவற்றைப் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் ஆறாம் வகுப்பில் படித்தான். அருணுக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் படிப்பில் அவன் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆசிரியர் சொல்லும் பாடங்களை சரியாகக் கேட்காமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பான்.


ஒருநாள் தமிழ் ஆசிரியர் வகுப்பில் இந்தத் திருக்குறளைச் சொன்னார்:


“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.”




ஆசிரியர் அதன் பொருளையும் விளக்கினார். “நாம் ஒரு விஷயத்தை முழுமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பிறகு வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.


அந்த வாரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு செயல் மாதிரி செய்ய வேண்டும். அருண் தயாராகவில்லை. ஆனால் அவன் நண்பன் விஜய் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை கவனமாகக் கற்று, அழகான மழைநீர் சேமிப்பு மாதிரியை செய்திருந்தான்.


கண்காட்சியில் அனைவரும் விஜயைப் பாராட்டினர். தலைமை ஆசிரியரும் பரிசு வழங்கினார். அருணுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.


அன்று வீட்டிற்கு வந்தபின், ஆசிரியர் கூறிய திருக்குறள் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “நான் சரியாகக் கற்கவில்லை. அதனால்தான் வெற்றி கிடைக்கவில்லை,” என்று எண்ணினான்.


அதன் பிறகு அருண் தினமும் பாடங்களை கவனமாகக் கற்றான். சந்தேகம் வந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான். சில மாதங்களில் அவன் வகுப்பில் முதல் ஐந்து இடங்களில் வந்தான்.


ஆசிரியர் அவனைப் பாராட்டி, “இப்போது நீ இந்தத் திருக்குறளின் பொருளை உண்மையாகப் புரிந்துகொண்டாய்,” என்றார்.


அருண் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.


கதையின் நெறி:


நாம் கற்றதை தெளிவாகக் கற்று, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.


(இரா. ஸ்ரீப்ரியா, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்),  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்