கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகனங்கள் அதிகளவில் வருவதினால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம். இ-பாஸ் நடைமுறை ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இ-பாஸ் முறையால் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 வாகனங்கள் கொடைக்கானல் பகுதிகளில் உலா வருவதாகவும், இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடிவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ பாஸ் பெறுவது சுலபமாகவே இருப்பதால் கொடைக்கானல் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளும் கூட ஹேப்பிதான்.!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}