கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகனங்கள் அதிகளவில் வருவதினால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம். இ-பாஸ் நடைமுறை ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இ-பாஸ் முறையால் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 வாகனங்கள் கொடைக்கானல் பகுதிகளில் உலா வருவதாகவும், இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடிவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ பாஸ் பெறுவது சுலபமாகவே இருப்பதால் கொடைக்கானல் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளும் கூட ஹேப்பிதான்.!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}