கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகனங்கள் அதிகளவில் வருவதினால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம். இ-பாஸ் நடைமுறை ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இ-பாஸ் முறையால் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 வாகனங்கள் கொடைக்கானல் பகுதிகளில் உலா வருவதாகவும், இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடிவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ பாஸ் பெறுவது சுலபமாகவே இருப்பதால் கொடைக்கானல் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளும் கூட ஹேப்பிதான்.!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}