கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகனங்கள் அதிகளவில் வருவதினால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம். இ-பாஸ் நடைமுறை ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இ-பாஸ் முறையால் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 வாகனங்கள் கொடைக்கானல் பகுதிகளில் உலா வருவதாகவும், இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடிவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ பாஸ் பெறுவது சுலபமாகவே இருப்பதால் கொடைக்கானல் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளும் கூட ஹேப்பிதான்.!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}