தொண்டர்களின் கண்ணீரில் மிதக்கும் கோயம்பேடு.. வாகனங்கள் திணறல்.. போக்குவரத்து மாற்றம்

Dec 28, 2023,04:18 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தவண்ணம் இருப்பதால் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே உள்ளது.


விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அங்குதான் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.




பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என சாரை சாரையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுமக்கள் கண்ணீருடனும், அழுது புலம்பியபடி கோயம்பேட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் விஜயகாந்த் குறித்த  நினைவுகளைப் பகிர்ந்தபடி அழுது புலம்பிக் கொண்டு போவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.


கோயம்பேடு பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிவதாலும், வாகனங்கள் குவிவதாலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இப்பகுதியில் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்