சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தவண்ணம் இருப்பதால் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே உள்ளது.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அங்குதான் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என சாரை சாரையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுமக்கள் கண்ணீருடனும், அழுது புலம்பியபடி கோயம்பேட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தபடி அழுது புலம்பிக் கொண்டு போவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.
கோயம்பேடு பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிவதாலும், வாகனங்கள் குவிவதாலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இப்பகுதியில் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}