சென்னை: கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அழகனகான கெட்டப்களில் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் நாடெங்கும் வலம் வந்து கலகலப்பை ஏற்படுத்தினர்.
இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் முன்பு இது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அதே போல கேரளாவிலும் களை கட்டியிருக்கும். ஆனால் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டும், ராதை வேடம் போட்டும் பெற்றோர்கள், குடும்பத்தினர் அழகு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் வீடுகள் தோறும் உற்சாகத்தை ஏற்படுத்தினர். வீடுகளில் குட்டி கிருஷ்ணர் பாதம் கோலமிட்டு பூஜைகளும் செய்யப்பட்டன.

வழக்கம் போல கேரளாவில் இந்த முறையும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் போட்டு அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்வுகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் களை கட்டியிருந்தன.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதர்மத்திற்கு எதிராக தர்மத்தை நிலை நாட்டியவர் கிருஷ்ணர் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}