சென்னை: கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அழகனகான கெட்டப்களில் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் நாடெங்கும் வலம் வந்து கலகலப்பை ஏற்படுத்தினர்.
இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் முன்பு இது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அதே போல கேரளாவிலும் களை கட்டியிருக்கும். ஆனால் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டும், ராதை வேடம் போட்டும் பெற்றோர்கள், குடும்பத்தினர் அழகு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் வீடுகள் தோறும் உற்சாகத்தை ஏற்படுத்தினர். வீடுகளில் குட்டி கிருஷ்ணர் பாதம் கோலமிட்டு பூஜைகளும் செய்யப்பட்டன.

வழக்கம் போல கேரளாவில் இந்த முறையும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் போட்டு அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்வுகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் களை கட்டியிருந்தன.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதர்மத்திற்கு எதிராக தர்மத்தை நிலை நாட்டியவர் கிருஷ்ணர் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}