"எதார்த்தனமான படம்.. நல்லாருக்கு.. ஜாலியா பார்க்கலாம்".. பாராட்டு மழையில் குளிக்கும் "குய்கோ"!

Nov 25, 2023,04:13 PM IST

சென்னை: யோகி பாபு, விதார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள குய்கோ படம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்வியல் பற்றிய படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. அப்படிப்பட்ட படங்களிலும் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது புரியும். ஒரு சிறிய விஷயத்தை வைத்து அதில் எந்த அளவுக்கு நகைச்சுவையை வைக்க முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருள்செழியன்.




விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பார்த்த அனைவரும் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள்.




எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் குய்கோ படத்தை பலரும் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக குய்கோ அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.




குய்கோ படத்தில், விதார்த் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.




வாய் விட்டு சிரித்து விட்டு.. அப்படியே கொஞ்சம் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்து விட்டு வரணும்னு நினைச்சா குய்கோவுக்குப் போயிட்டு வாங்க.. படம் ஜாலியா இருக்கு.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்