- கவிஞர் க. முருகேஸ்வரி
அனைத்தும் தெரிந்தவன் ஆயிரம் செய்வான்.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். அதுவே அவனின் இயல்பு என்று கூறுவார்கள்.ஆனால் அது அவனின் விதி.. .ஆனால் அவன் செய்த அனைத்தும் கடவுளுக்கும் அவனுக்கும் அவனால் பயன் அடைந்தோருக்கும் தெரியும்.
அவனுக்கு நேர் எதிரே ஒன்றுமே தெரியாது.ஆனால் அதுவே அவருக்கு தெரியாது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற பிதற்றலும் பெருமையும் பித்தலாட்டமும் நிறைய இருக்கும். இதுவும் விதி.... அந்தப் போலியை நம்பி சில முட்டாள்கள்..... ஜால்ரா வேறு....
இதில் மற்றவர்களைப் பார்த்து குறை வேறு..... முதலில் நம்மிடம் உள்ள குறைகளை சரி செய்து விட்டு..அடுத்தவரிடம் செல்ல வேண்டும்...
நம் வாழ்வில் நித்தம் நித்தம் நாம் அனைவரும் கொதித்துப் பார்க்கும் விஷயம் தான் இது....
இதற்கு என்ன தான் தீர்வு?
ஒரு தீர்வும் இல்லை.
குறை குடம் கூத்தாடத் தான் செய்யும்.
குடத்தை நிரப்பவும் முடியாது.... கூத்தாடுவதை நிறுத்தவும் முடியாது... கூடவே நாமும் சேர்ந்து ஒரு குதி குதித்து விட்டு போக வேண்டியது தான்!!!!!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு....
சிலருக்கு கிடைக்கும் அனுபவம் மற்றும் வயதுக்கேற்ற அந்த முதிர்ச்சியும் அவங்களா...இவங்க என்னும் அளவிற்கு மாற்றத்தைக் கொடுக்கும். அப்படி பல பேர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சாதனைகள் படைக்கத் தொடங்குவர். அவர்கள் பல பேருக்கு முன்னோடியாகவும் மாறியிருப்பார்கள்.
நாம் நம்மைப் புரிந்து கொண்டு நம்மில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நிறைகுடமாக மாறுவது நம் கையில் தான் உள்ளது.... .நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.
நம் வேலையை நாம் சரிவர செய்கிறோமா... யோசிக்க வேண்டும்.
ஒரு மாணவனின் வேலை என்ன? நன்றாகப் படிப்பது.
ஒரு படைப்பாளன்.....நல்ல படைப்புகளைத் தர வேண்டும்.
அவரவர் தமக்குரிய கடமைகளை செய்ய ஆரம்பித்தாலே போதும்....
முடியாது...தெரியாது ..நேரம் இல்லை.....இந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு....
உழைப்பைத் கொடு.....தெரியாததைத் தேடு..... புத்தகம் படி...புதிதாய்க் கற்றுக் கொள்.... முயற்சி திருவினையாக்கும்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}