குறை குடம்‌ கூத்தாடும் !

Feb 04, 2026,04:50 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


அனைத்தும் தெரிந்தவன் ஆயிரம் செய்வான்.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். அதுவே அவனின் இயல்பு என்று கூறுவார்கள்.ஆனால் அது அவனின் விதி.. .ஆனால் அவன் செய்த அனைத்தும்‌ கடவுளுக்கும் அவனுக்கும் அவனால் பயன் அடைந்தோருக்கும் தெரியும்.

 

அவனுக்கு நேர் எதிரே ஒன்றுமே தெரியாது.ஆனால் அதுவே அவருக்கு தெரியாது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற பிதற்றலும் பெருமையும் பித்தலாட்டமும் நிறைய இருக்கும். இதுவும் விதி.... அந்தப் போலியை நம்பி சில முட்டாள்கள்..... ஜால்ரா வேறு....




இதில் மற்றவர்களைப் பார்த்து குறை வேறு..... முதலில் நம்மிடம் உள்ள குறைகளை சரி செய்து விட்டு..அடுத்தவரிடம் செல்ல வேண்டும்...


நம் வாழ்வில் நித்தம் நித்தம் நாம்‌ அனைவரும் கொதித்துப் பார்க்கும் விஷயம் தான் இது....


இதற்கு என்ன தான் தீர்வு?


ஒரு தீர்வும் இல்லை.


குறை குடம்‌ கூத்தாடத் தான் செய்யும்.


குடத்தை நிரப்பவும் முடியாது.... கூத்தாடுவதை நிறுத்தவும் முடியாது... கூடவே நாமும் சேர்ந்து ஒரு குதி குதித்து விட்டு போக வேண்டியது தான்!!!!!


மனமிருந்தால் மார்க்கம் உண்டு....


சிலருக்கு கிடைக்கும் அனுபவம் மற்றும் வயதுக்கேற்ற அந்த முதிர்ச்சியும் அவங்களா...இவங்க என்னும் அளவிற்கு மாற்றத்தைக் கொடுக்கும். அப்படி பல பேர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சாதனைகள் படைக்கத் தொடங்குவர். அவர்கள் பல பேருக்கு முன்னோடியாகவும் மாறியிருப்பார்கள்.


நாம் நம்மைப் புரிந்து கொண்டு நம்மில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நிறைகுடமாக மாறுவது நம் கையில் தான் உள்ளது.... .நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.


நம் வேலையை நாம் சரிவர செய்கிறோமா... யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவனின் வேலை என்ன? நன்றாகப் படிப்பது.

ஒரு படைப்பாளன்.....நல்ல படைப்புகளைத் தர வேண்டும்.

அவரவர் தமக்குரிய கடமைகளை செய்ய ஆரம்பித்தாலே போதும்....


முடியாது...தெரியாது ..நேரம் இல்லை.....இந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு....


உழைப்பைத் கொடு.....தெரியாததைத் தேடு..... புத்தகம் படி...புதிதாய்க் கற்றுக் கொள்.... முயற்சி திருவினையாக்கும்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்