ஊட்டி: நீலகிரி மாவட்டம் பிக்கப்பத்தி மந்து மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களைக் காண, வெளியாட்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிஞ்சி பூ நீலகிரி மலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூக்கள் நீலநிறத்தில் இருப்பதால் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என பெயர் வந்தது. குறிஞ்சி பூ புதர்வகையை சேர்ந்த செடியாகும். ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது இப்பூவின் தாவரவியல் பெயராகும். இந்த குறிஞ்சி பூ குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் உள்ளன. இதில் குறிப்பாக 30க்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை குறிஞ்சி பூ பூக்கும் சுழற்சியை வைத்து கணக்கிட்டு வருவார்களாம். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதை கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணித்துள்ளனர். இந்த குறிஞ்சி பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு காலங்களில் பூக்கும் தன்மை கொண்டதாகும். 1,3,6,12 ஆண்டுகளில் இவை பூக்கின்றன. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி தற்போது நீலகிரி பகுதிகளில் பூத்துள்ளன.
ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஸ்டோபிலாந்தஸ் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன. இந்த மலர்கள் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், இங்கு விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}