ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Oct 25, 2025,04:20 PM IST

கர்னூல்: ஆந்திராவில் 20 பேர் பலியான வால்வோ பேருந்து விபத்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ மளமளவென பரவியதில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது.




இந்த பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 21 பேர் தீப்பிடித்ததும் ஜன்னல்கள் வலியாக குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் விபத்து நடித்துள்ளதால் பல பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில், 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் சிலரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.


இந்த நிலையில், விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. விபத்தில் சிக்கிய வால்வோ பேருந்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்