ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Oct 25, 2025,04:20 PM IST

கர்னூல்: ஆந்திராவில் 20 பேர் பலியான வால்வோ பேருந்து விபத்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ மளமளவென பரவியதில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது.




இந்த பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 21 பேர் தீப்பிடித்ததும் ஜன்னல்கள் வலியாக குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் விபத்து நடித்துள்ளதால் பல பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில், 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் சிலரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.


இந்த நிலையில், விபத்திற்கான முக்கிய காரணம் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. விபத்தில் சிக்கிய வால்வோ பேருந்தில், பெங்களூரு பிலிப்கார்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே பேருந்தில் பெரும் தீ விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்