சென்னை: தமிழர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குவைத்தில் மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளனர். திடீரென அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டடத்தின் எல்லா பகுதிகளிலும் தீ பரவியது.
இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் இதில் உயிரிழந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குவைத் நாட்டிலுள்ள அல் அதான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உறவினர்களின் நிலையை அறிந்து கொள்ள 96 56 550 52 46 என்ற எண் மூலம் தெரிந்து கொள்ளலாம் என இந்திய தூதரகம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் படி அயலாக்க தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையகரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்த விவரங்களை இந்தியா: +91 1800 309 37 93, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 69009909 என்ற எண்கள் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்:
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆழ்ந்த இரக்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள் இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. கொடிய தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், இறந்தோர் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை தேவை எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}