டெல்லி: ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்யாதவ் வீட்டில் மட்டன் கறி சாப்பிட்டு ஹேப்பியாக அதைக் கொண்டாடியுள்ளார் ராகுல் காந்தி.
இந்த மட்டன் கறியை லாலு பிரசாத் யாதவே சமைத்து ராகுல் காந்திக்குப் பரிமாறினார் என்பது கூடுதல் விசேஷமாகும்.
சூரத் கோர்ட் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலில் குஜராத் உயர்நீதிமன்றத்திலும்,பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார் ராகுல் காந்தி. சுப்ரீம் கோர்ட், தற்போது இடைக்கால நிவாரணமாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தோஷத்தை காங்கிரஸார் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராகுல் காந்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நேற்று இரவு லாலு பிரசாத் யாதவின் டெல்லி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை லாலு பிரசாத் யாதவ் உற்சாகமாக வரவேற்றார். பின்னர் ராகுல் காந்திக்கு,லாலு பிரசாத் யாதவ் இரவு விருந்து அளித்துக் கெளரவித்தார்.
இந்த விருந்தில் மட்டன் கறி பரிமாறப்பட்டது. இதை லாலுவே சமைத்தாராம். அவரது கையால் பரிமாறவே, நன்கு ருசித்துச் சாப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த விருந்துக்காக பீகாரிலிருந்தே ஆட்டுக்கரி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்திருந்தாரம் லாலு பிரசாத் யாதவ். பீ கார் ஸ்டைலில் அதை சமைத்துள்ளார். அதை ராகுலிடேமே கூறி சந்தோஷப்பட்டாராம் லாலு. இந்த சந்திப்பின்போது நிறைய அரசியல் பேசப்பட்டதாம். தனிப்பட்ட முறையிலும் சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்தாராம் லாலு பிரசாத் யாதவ்.
டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதி வீட்டல்தான் லாலு பிரசாத் யாதவ் தற்போது தங்கி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}