ஒரு போராளியின் பிறந்த நாள்.. சீமானுக்குக் குவிந்த வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிச்சாமி முதல் விஜய் வரை!

Nov 08, 2023,03:29 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பல்துறைப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


சீமான்.. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருபவர். இப்போது அரசியல் தலைவராக தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் சக்தியாக வலம் வருபவரும் கூட.


1970ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் உள்ள அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் சீமான். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பு முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை வந்தவர். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.




சில படங்களில் வசனம் எழுதியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் தன் நடிப்பு திறனையும் வெளிக்காட்டியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.


2010ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கி அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளாராக உள்ளார். ஈழ போராட்டத்துக்காக ஐந்து முறை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.


சீமான்  பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நடிகர் விஜய் சீமானை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து இன்னும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்