சென்னை: லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்த இடத்தில் ரத்து செய்யப்பட்டதோ அதே இடத்தில் படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்த படக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ரசிகர்கள் இப்போதே தடபுடலாக இதைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம்தான் லியோ. உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்புகளும், முட்டுக்கட்டைகளும் இருக்கவே செய்தன.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றி விட்டது. இருந்தாலும் படத்தை மிகப் பெரிய வெற்றியாக ரசிகர்கள் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இப்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழாவை நடத்த படக் குழு முடிவு செய்துள்ளதாகவும், விஜய் கலந்து கொள்வார் என்றும் அந்த செய்தி கூறுகிறது. இந்த விழாவுக்குப் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மணிகண்டன் என்பவர் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் பிரமாண்டமாக வைப்பார்கள். முன்பு படங்கள் 100 நாள் ஓடினால், வெற்றி விழா நடைபெறும். காலப் போக்கில் இந்த வெற்றி விழாக்கள் இல்லாமல் போய் விட்டன. காரணம் இப்போதெல்லாம் படங்கள் 25 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடினாலே உலக அதிசயம் என்றாகி விட்டதால். அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றால், அது நீண்ட காலத்திற்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற முதல் வெற்றி விழாவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}