சென்னை: லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்த இடத்தில் ரத்து செய்யப்பட்டதோ அதே இடத்தில் படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்த படக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ரசிகர்கள் இப்போதே தடபுடலாக இதைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம்தான் லியோ. உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்புகளும், முட்டுக்கட்டைகளும் இருக்கவே செய்தன.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றி விட்டது. இருந்தாலும் படத்தை மிகப் பெரிய வெற்றியாக ரசிகர்கள் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இப்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழாவை நடத்த படக் குழு முடிவு செய்துள்ளதாகவும், விஜய் கலந்து கொள்வார் என்றும் அந்த செய்தி கூறுகிறது. இந்த விழாவுக்குப் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மணிகண்டன் என்பவர் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் பிரமாண்டமாக வைப்பார்கள். முன்பு படங்கள் 100 நாள் ஓடினால், வெற்றி விழா நடைபெறும். காலப் போக்கில் இந்த வெற்றி விழாக்கள் இல்லாமல் போய் விட்டன. காரணம் இப்போதெல்லாம் படங்கள் 25 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடினாலே உலக அதிசயம் என்றாகி விட்டதால். அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றால், அது நீண்ட காலத்திற்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற முதல் வெற்றி விழாவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}