மயிலாடுதுறை: மயிலாடுதுறை குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை இன்று வரை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணி 8வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்க வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர் . மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். காவிரி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 19 கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணி இன்றுடன் 8வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தை கண்ணில் தென்படவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனன. ஆனால் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
பல இடங்களில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை wwf india நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.சிறுத்தையைப் பிடிக்க டிரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுத்தை அந்த ஊர் மக்களிடையே போக்கு காட்டி இன்று வரை சிக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே, சிறுத்தை மயிலாடுதுறைக்குள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}