மயிலாடுதுறை: மயிலாடுதுறை குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை இன்று வரை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணி 8வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்க வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர் . மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். காவிரி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 19 கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணி இன்றுடன் 8வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தை கண்ணில் தென்படவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனன. ஆனால் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
பல இடங்களில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை wwf india நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.சிறுத்தையைப் பிடிக்க டிரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுத்தை அந்த ஊர் மக்களிடையே போக்கு காட்டி இன்று வரை சிக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே, சிறுத்தை மயிலாடுதுறைக்குள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}