லின்டா கைக்கு மாறப் போகிறதா டிவிட்டர்.. எலான் மஸ்க் பதவி விலகுகிறார்

May 12, 2023,12:06 PM IST
கலிபோர்னியா:  டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பொறுப்பில் என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள லின்டா யாக்கரினோ நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. எலான் மஸ்க் இதுதொடர்பான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார் எலான் மஸ்க். அதன் பின்னர் அவரே தலைமை செயலதிகாரியாகவும் இருக்கிறார். பல ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். அதிரடியான பல மாற்றங்களைச் செய்தார். தொடர்ந்து  டிவிட்டரில் பல மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளன. விரைவில் தொழில்நுட்ப ரீதியாக பெரும் புரட்சிகரமான மாற்றங்களையும் டிவிட்டர் காணவுள்ளது.



இந்த நிலையில்,  தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகப் போகிறார் எலான் மஸ்க். இதை சில மாதங்களுக்கு முன்பு அவரே கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை செயலதிகாரியை அவர் கண்டுபிடித்துள்ளார். என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள லின்டா யாக்கரினோவுடன் இதுதொடர்பாக பேச்சு முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக நேற்று அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் இன்னும் ஆறு வாரங்களில் புதிய சிஇஓ தனது பணியைத் தொடங்குவார். நான் செயல் தலைவர் மற்றும் தலைமை டெக்னாலிஜிஸ்ட்டாக மாறுவேன் என்று கூறியுள்ளார். அந்த புதிய சிஇஓ லின்டாதான் என்று சொல்லப்படுகிறது. லின்டா தற்போது என்பிசி யுனிவர்சல் மீடியா நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரம் மற்றும் பங்குதாரர்கள் பிரிவின் தலைவராக இருக்கிறார். 

புதிய சிஇஓ எப்படி இருப்பார்.. மஸ்க் மாதிரி செயல்படுவாரா அல்லது மஸ்க்கை விட வேகமாக இருப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்