டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுபான விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடத்தியதாகவும், மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறி மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை செய்த நிலையில், கடந்த 26ம் தேதி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐயும், அமலாக்கத்துறையும் சேர்ந்து கைது செய்தது. 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், மணீஷ் சிசோடியா பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காததினால், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார் சிசோடியா.

அங்கு இன்று நடந்த விசாரணையின் இறுதியில் ஜாமீன் தர மறுத்த உச்சநீதிமன்றம், சிசோடியா மீதான வழக்கை விரைவு கோர்ட் மூலம் வேகமாக விசாரிக்கவும் உத்தரவிட்டது. வழக்கை 6 முதல் 8 மாதத்திற்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியா அனுமதி கோரியதால், ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}