இந்த நொடியில் வாழ்ந்து விடு

Dec 25, 2025,03:07 PM IST

- தி. மீரா


நேற்றின் சுமையை இறக்கி வை,

நாளையின் பயத்தை மறந்து விடு,


இப்போது துடிக்கும் இதயத் தாளம்

இதுவே வாழ்க்கை — உணர்ந்து விடு.

சிறு சிரிப்பில் சொர்க்கம் உண்டு,

ஒரு மூச்சில் உலகம் அடங்கும்,


கடிகார முள் ஓடும் முன்

இந்த நொடியை அணைத்துக் கொள்.

இழந்ததை எண்ணி வாடாதே,

இருப்பதை மதித்து நேசி,




திரும்பாத இந்தக் கணத்தில்

முழுமையாய் வாழ்ந்து விடு.


கண்ணீர் வந்தால் தடுத்து வைக்காதே,

அதுவும் ஒரு சுத்திகரிப்பு,

மகிழ்ச்சி வந்தால் தள்ளி வைக்காதே,

அதுவே வாழ்க்கையின் பரிசு.


மெதுவாய் நட, ஆழமாய் சுவாசி,

உன் உள்ளத்தை கேட்டு பார்,

இப்போது என்ற இந்தப் புள்ளியில்

நித்தியமும் மறைந்திருக்கிறது.


போகும் நேரம் போகட்டும்,

வரும் நேரம் வரட்டும்

இந்த நொடி உன் கையில் இருக்கையில்

வாழ்வை விழியால் அருந்து.


(முனைவர் பாவலர் தி.மீரா, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்