- தி. மீரா
நேற்றின் சுமையை இறக்கி வை,
நாளையின் பயத்தை மறந்து விடு,
இப்போது துடிக்கும் இதயத் தாளம்
இதுவே வாழ்க்கை — உணர்ந்து விடு.
சிறு சிரிப்பில் சொர்க்கம் உண்டு,
ஒரு மூச்சில் உலகம் அடங்கும்,
கடிகார முள் ஓடும் முன்
இந்த நொடியை அணைத்துக் கொள்.
இழந்ததை எண்ணி வாடாதே,
இருப்பதை மதித்து நேசி,

திரும்பாத இந்தக் கணத்தில்
முழுமையாய் வாழ்ந்து விடு.
கண்ணீர் வந்தால் தடுத்து வைக்காதே,
அதுவும் ஒரு சுத்திகரிப்பு,
மகிழ்ச்சி வந்தால் தள்ளி வைக்காதே,
அதுவே வாழ்க்கையின் பரிசு.
இப்போது என்ற இந்தப் புள்ளியில்
நித்தியமும் மறைந்திருக்கிறது.
போகும் நேரம் போகட்டும்,
வரும் நேரம் வரட்டும்
இந்த நொடி உன் கையில் இருக்கையில்
வாழ்வை விழியால் அருந்து.
(முனைவர் பாவலர் தி.மீரா, ஈரோடு)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}