இந்த நொடியில் வாழ்ந்து விடு

Dec 25, 2025,03:07 PM IST

- தி. மீரா


நேற்றின் சுமையை இறக்கி வை,

நாளையின் பயத்தை மறந்து விடு,


இப்போது துடிக்கும் இதயத் தாளம்

இதுவே வாழ்க்கை — உணர்ந்து விடு.

சிறு சிரிப்பில் சொர்க்கம் உண்டு,

ஒரு மூச்சில் உலகம் அடங்கும்,


கடிகார முள் ஓடும் முன்

இந்த நொடியை அணைத்துக் கொள்.

இழந்ததை எண்ணி வாடாதே,

இருப்பதை மதித்து நேசி,




திரும்பாத இந்தக் கணத்தில்

முழுமையாய் வாழ்ந்து விடு.


கண்ணீர் வந்தால் தடுத்து வைக்காதே,

அதுவும் ஒரு சுத்திகரிப்பு,

மகிழ்ச்சி வந்தால் தள்ளி வைக்காதே,

அதுவே வாழ்க்கையின் பரிசு.


மெதுவாய் நட, ஆழமாய் சுவாசி,

உன் உள்ளத்தை கேட்டு பார்,

இப்போது என்ற இந்தப் புள்ளியில்

நித்தியமும் மறைந்திருக்கிறது.


போகும் நேரம் போகட்டும்,

வரும் நேரம் வரட்டும்

இந்த நொடி உன் கையில் இருக்கையில்

வாழ்வை விழியால் அருந்து.


(முனைவர் பாவலர் தி.மீரா, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!

news

தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?

news

மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

news

பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

news

இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி

news

இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!

news

பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்

news

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்

news

உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)

அதிகம் பார்க்கும் செய்திகள்