- தி. மீரா
நேற்றின் சுமையை இறக்கி வை,
நாளையின் பயத்தை மறந்து விடு,
இப்போது துடிக்கும் இதயத் தாளம்
இதுவே வாழ்க்கை — உணர்ந்து விடு.
சிறு சிரிப்பில் சொர்க்கம் உண்டு,
ஒரு மூச்சில் உலகம் அடங்கும்,
கடிகார முள் ஓடும் முன்
இந்த நொடியை அணைத்துக் கொள்.
இழந்ததை எண்ணி வாடாதே,
இருப்பதை மதித்து நேசி,

திரும்பாத இந்தக் கணத்தில்
முழுமையாய் வாழ்ந்து விடு.
கண்ணீர் வந்தால் தடுத்து வைக்காதே,
அதுவும் ஒரு சுத்திகரிப்பு,
மகிழ்ச்சி வந்தால் தள்ளி வைக்காதே,
அதுவே வாழ்க்கையின் பரிசு.
இப்போது என்ற இந்தப் புள்ளியில்
நித்தியமும் மறைந்திருக்கிறது.
போகும் நேரம் போகட்டும்,
வரும் நேரம் வரட்டும்
இந்த நொடி உன் கையில் இருக்கையில்
வாழ்வை விழியால் அருந்து.
(முனைவர் பாவலர் தி.மீரா, ஈரோடு)
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}