- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
சர்க்கரை நோய் ,உடல் பருமன்போன்ற நோய்கள் இல்லாமல் வாழ ஆசையா? பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தி நோயின்றி வாழ்வோம்.
தமிழகத்தில், அரிசி உணவாக மட்டுமின்றி கலாச்சாரம், மரபு, மருத்துவம், வழிபாடு, வாழ்க்கைமுறை என அனைத்திலும் ஒன்றிணைந்துள்ளது. நவீன காலத்தில் ஹைபிரிட் மற்றும் உயர்தர விளைச்சல் வகைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு முன்னர் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த பாரம்பரிய அரிசி வகைகள் உடல்நலம், இயற்கை சமநிலை மற்றும் சுயநிறைவு விவசாயத்திற்கு அடித்தளமாக இருந்தன.
பாரம்பரிய அரிசி வகைகள் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வளர்த்தெடுக்கப்பட்ட, விதை மரபு மாற்றமில்லாமல் தலைமுறைகள் தலைமுறையாக காக்கப்பட்ட அரிசி வகைகளைக் குறிக்கப்படுகிறது. இக்கட்டுரையில், அந்தப் பாரம்பரிய அரிசி வகைகளின் முக்கியத்துவம், வகைகள், பயன்கள் மற்றும் இன்றைய தேவைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இயற்கை விதைகள் கொண்டதாகவும், வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இன்றி வளர்ந்தும்,
மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கு ஏற்றவையாகவும், மனித உடல்நலத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தவையாகவும், குறைந்த விளைச்சல் தருவதாகக் கருதப்பட்டாலும், அவை தரும் ஊட்டச்சத்து மதிப்பு மிக உயர்வானதாகும்.
இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி மண்ணின் வளத்தை பாதுகாக்கும் தன்மை நீர் தேவையில் சமநிலை சுயநிறைவு விவசாயத்திற்கு உகந்தவை மனித உடல்நலத்திற்கு நன்மை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
சிவப்பு அரிசி வகைகள், கருப்பு அரிசி வகைகள், வெள்ளை பாரம்பரிய அரிசி வகைகள், மருத்துவப் பயன்பாட்டு அரிசி வகைகள்,பிராந்திய அடிப்படையிலான அரிசி வகைகள் என்று வகைப்படுத்தலாம்.
1. கருப்புக் கவுனி
கருப்புக் கவுனி தமிழகத்தின் மிக முக்கியமான பாரம்பரிய அரிசி வகையாகும். இது நார்ச்சத்து, இரும்புச் சத்து நிறைந்ததாகும். உடல் வலிமை, இரத்த சோகை தடுப்பு போன்ற பயன்களை வழங்குகிறது.
2. செங்கால் சம்பா
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற அரிசியாகும். எளிதில் ஜீரணமாகும்.
3. சிவப்பு கவுனி
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
கருப்பு அரிசி வகைகள்:
1. கருப்பு கவுனி
அரிசியின் அரசன் என அழைக்கப்படும் இந்த வகை, ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்தது. இதய நோய்களைத் தடுக்கும் சக்தி உள்ளது.
2. கருப்பு சீரகம்
மருத்துவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் அரிய அரிசி வகையாகும்.
வெள்ளை பாரம்பரிய அரிசி வகைகள்:
1. சம்பா
தமிழகத்தின் முக்கியமான பாரம்பரிய அரிசி வகை. மணமிக்கதாகவும் சத்தானதாகவும் உள்ளது.
2. மாப்பிள்ளை சம்பா
ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது.
3. கிச்சிலி சம்பா
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உகந்தது.
மருத்துவப் பயன்பாட்டு அரிசி வகைகள்
1. நவரா
ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக அரிசி. நரம்புத் தளர்ச்சி, உடல் வலி ஆகியவற்றிற்கு சிறந்தது.
2. காளமு
மூட்டு வலி மற்றும் மூச்சுத் திணறலுக்கு பயன் தரும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரிசி வகைகள்:
1. கருங்குருவை
இரும்புச் சத்து அதிகம். இரத்த சோகையைத் தடுக்கும்.
2. பாலாடு சம்பா
பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்தது.
நகரமயமாக்கல், வேதியியல் விவசாயம், சந்தை அழுத்தம் ஆகிய காரணங்களால் பல பாரம்பரிய அரிசி வகைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இருப்பினும், இயற்கை வேளாண்மை இயக்கங்கள் அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்கால உணவு பாதுகாப்பு, விவசாயியின் சுயநிறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாரம்பரிய அரிசி வகைகளை நாம் பாதுகாத்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
விதை வங்கிகள் அமைத்தல், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பள்ளி உணவுத் திட்டங்களில் சேர்த்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவை இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
பாரம்பரிய அரிசி வகைகள் என்பது வெறும் உணவல்ல.அது நம் முன்னோர்களின் அறிவு, அனுபவம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் சின்னமாகும். அவற்றை பாதுகாத்து, பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு அளிப்பது நமது கடமையாகும். பாரம்பரிய அரிசி மீண்டும் நமது உணவுத்தட்டில் இடம் பெற்றால், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தும் வளம் பெறும்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}