டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு போர் வேகத்தில் தயாராக ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. சசிகாந்த் செந்தில் தலைமையில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
சசிகாந்த் செந்திலை யாரும் மறந்திருக்க முடியாது.. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அட்டகாசமான வெற்றியைத் தேடிக் கொடுக்க தீவிரமாக உழைத்தவர்தான் சசிகாந்த் செந்தில்.
முன்னால் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றியவர். பின்னர் தனது வேலையை விட்டு விட்டு காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி காட்டியது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசார உத்திகள், ராகுல் காந்தியின் பிரசார உத்தி உள்ளிட்டவற்றை வகுத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து அழகாக வடிவமைத்தது செந்தில் தலைமையிலான குழுதான். பாஜகவின் பல்வேறு அஸ்திரங்களையும் தகர்த்து இந்தக் குழு அமைத்துக் கொடுத்த வியூகத்தால்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை கர்நாடகத்தில் பெற முடிந்தது.
தற்போது சசிகாந்த் செந்திலின் பணியை மிகப் பெரிய அளவுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை லோக்சபா தேர்தலுக்கான வார் ரூம் தலைவராக நியமித்துள்ளால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. அதாவது நாடு முழுமைக்குமான உத்திகளை வகுக்கும் மிகப்பெரிய பொறுப்பு சசிகாந்த் செந்தில் டீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக வார் ரூம் மற்றும் தகவல் தொடர்பு வார் ரூம் என இரு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதில் நிர்வாக வார் ரூமின் தலைவராக சசிகாந்த் செந்தில் செயல்படுவார். தகவல் தொடர்பு வார் ரூமின் தலைவராக வைபவ் வாலியா செயல்படுவார்.
சசிகாந்த் செந்தில் குழுவில், கோகுல் புடையில், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் துணைத் தலைவர்களாக செயல்படுவார்கள்.
சசிகாந்த் செந்தில் தலைமையில் மத்திய வார் ரூம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}