சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 28ஆம் தேதி நடக்கவுள்ளது. டி.ஆர் பாலு தலைமையில், திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாக கூட்டணியா இணைந்து செயல்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாகி வருகின்றன.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் குழு ,தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவும், காங்கிரஸ் குழுவும் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜனவரி 28ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் டி ஆர் பாலு தலைமையில் திமுக குழு பங்கேற்கிறது. இதில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல காங்கிரஸ் குழுவும் இதில் பங்கேற்கிறது.
இதில் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான். தொடர்ந்து மேலும் சில முறை கூடி பேசி இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}