சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 28ஆம் தேதி நடக்கவுள்ளது. டி.ஆர் பாலு தலைமையில், திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாக கூட்டணியா இணைந்து செயல்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாகி வருகின்றன.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் குழு ,தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவும், காங்கிரஸ் குழுவும் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜனவரி 28ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் டி ஆர் பாலு தலைமையில் திமுக குழு பங்கேற்கிறது. இதில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல காங்கிரஸ் குழுவும் இதில் பங்கேற்கிறது.
இதில் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான். தொடர்ந்து மேலும் சில முறை கூடி பேசி இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}