Election 2024: பூத்தில் கூட்டமா இருக்கா?.. வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்கலாம்.. சூப்பர் வசதி அறிமுகம்!

Apr 19, 2024,10:52 AM IST

சென்னை:  வாக்குச் சாவடியில் கூட்டம் எப்படி இருக்கிறது, எத்தனை பேர் வரிசையில் காத்திருக்காங்க என்ற விவரத்தை அறிய தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்தபடியே  பூத்தில் இருக்கும் கியூவை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லலாம்.


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திருவிழா நாளை தொடங்குகிறது. 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியும் அடக்கம்.


வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. வாக்குச் சாவடிகளில் அந்தந்த தேர்தல் பணியாளர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விடிந்தால் கல்யாணம் என்பது போல நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது தேர்தல் ஆணையம் .


வரிசையில் எத்தனை பேர் காத்திருக்காங்க?




வாக்காளர்கள் தத்தமது வாக்குச் சாவடியில் எத்தனை பேர் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்கள், கியூ பெரிதாக இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து அறிய புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்துக்குப் போய் பூத்தில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து அறிந்து கொள்ளலாம். 


இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறுகையில், வாக்காளர்களின் வசதிக்காக மக்களவை தேர்தல் 2024க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலை அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


பூத் ஸ்லிப் வேண்டுமா?.. இதை பயன்படுத்துங்க


பலருக்கு பூத் ஸ்லிப் கிடைத்திருக்காது. இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருப்பதுதான் முக்கியம். வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நமது வாக்குச் சாவடி குறித்த விவரத்தையும் அறிய  https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி பூத் ஸ்லிப் குறித்த தகவல்களைப்  பெற முடியும்.


ஓட்டுப் போடுங்க.. அப்படியே செல்பியும் எடுங்க




மறுபக்கம் சென்னை மாநகராட்சி ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள அணைத்து வாக்கு சாவடிகளிலும் Selfie Booth-கள் வைக்கப்பட்டுள்ளன. "Vote போடுங்க.. Selfie எடுத்து Post போடுங்க!" கூடவே  @chennaicorp Tag பண்ணுங்க என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


பிறகென்ன ஜாலியா போய் ஓட்டுப் போட்டுட்டு அப்படியே ஜம்முன்னு ஒரு செல்பியையும் எடுத்து போட்டு விடுங்க.. உங்களைப் பார்த்து நாலு பேருக்கும் ஓட்டுப் போடும் ஆசை வரும் இல்லையா.. !


தேர்தல் திருவிழாவை அமர்க்களமாக கொண்டாடுங்க மக்களே.. மறக்காமல் ஓட்டுப் போடுங்க.. ஜனநாயகத்தை வலுப்படுத்துங்க!

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்