டெல்லி: மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் முடியும் வரை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். அதிகாரிகள் இடமாற்றத்தை தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் டிஜிபி ராஜீவ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்துறைச் செயலாளர்கள், முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிருஹன் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல், மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாநகராட்சி உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற இடமாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}