ஈரோட்டை திமுகவிடம் கொடுத்து விட்டு.. திருச்சியைப் பெற்றது மதிமுக.. துரை வைகோ போட்டி?

Mar 18, 2024,08:10 PM IST

சென்னை:  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.


2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ். திருநாவுக்கரசர் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தார். சென்ற முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற அந்த தொகுதி தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டுள்ளது.




திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 மக்களவை தொகுதியும், புதுவையில் ஒரு மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது. 2024ம் ஆண்டு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு மயிலாடுதுறையை பெற்றுள்ளது.  மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் மற்றும் வைகோவும் கையெழுத்திட்டுள்ளனர். 


திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரை வைகோவை வெற்றி பெற வைப்பது எங்களது பொறுப்பு என்று ஏற்கனவே திருச்சி திமுக தலைவர்கள் தலைமைக்கு உத்தரவாதம் கொடுத்து விட்டனராம். எனவே திருச்சி தொகுதி புதிய எம்.பியை வரவேற்க தயாராகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்