ஈரோடு: 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.
2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் மாத வெயில் மட்டும் அல்ல, தேர்தல் களமும் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் அடிக்கும் வெயிலை சிறிதும் பொருட்படுத்தாது தீவிரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85+ வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வாக்குகள் சேகரிக்கப்படும். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மட்டும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}