டெல்லி: 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 26ம் தேதி 2ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் திட்டமிடப்பட்டது. இதில் தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரில் தலா ஒரு தொகுதி ஆகிய 89 தொகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரப் பணியில் பல்வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதன் பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது.
2ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இறுதிக்கட்ட பணியில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்துள்ளனர். இங்கெல்லாம் தற்போது உச்சகட்ட இறுதிப்பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}