2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. 13 மாநிலங்கள், 89 தொகுதிகளில்.. இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது!

Apr 24, 2024,11:27 AM IST

டெல்லி: 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 26ம் தேதி 2ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.


இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் திட்டமிடப்பட்டது. இதில்  தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல்  26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.




இதில் கேரளாவில்  மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரில் தலா ஒரு தொகுதி ஆகிய 89 தொகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரப் பணியில் பல்வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டு  வருகின்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதன் பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது.


2ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இறுதிக்கட்ட பணியில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்துள்ளனர். இங்கெல்லாம் தற்போது உச்சகட்ட இறுதிப்பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்