குன்றம் தோறும் கொண்டாட்டம்.. பங்குனி பரவசம்.. ஆறுமுகனின் அருள் பெற ஆறுபடை செல்லுங்கள்!

Mar 19, 2024,12:45 PM IST

- லட்சுமி பாலா


பங்குனி வந்து விட்டது.. குன்றம் தோறும் குடியிருக்கும் குமரக் கோட்டங்கள் அனைத்திலும் பக்திப் பரவசம் பெருகி வழிகிறது. பக்தர்கள் கூட்டமும் நிரம்பித் ததும்புகிறது.


பங்குனி மாதம் முருகப் பெருமானுக்கு உகந்த மாதம்.. இந்த காலத்தில், முருகனின் ஆறுபடை திருத்தலங்களின் சிறப்பை உணர்ந்து வாழ்வில் வலம் பெறுவோம் வாருங்கள். 


திருப்பரங்குன்றம் - 1ஆம் படை வீடு  




இந்திரனின் வளர்ப்பு மகளான தேவசேனாவை முருக‌ன் மணந்ததாக கூறப்படும் மலைதான் இந்த திருப்பரங்குன்றம்.  மதுரையின் புறநகரில் அமைந்துள்ளது இந்த குன்றம். நக்கீரர் இத்தலத்தில் முருகனை வழிபட்டதாகவும் பரங்கிரிநாதாராக சிவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இது அறுபடை வீடுகளில் முதன்மையானது. இங்குள்ள முருகனுக்கு சுப்பிரமணியசாமி என்று பெயர்.


திருச்செந்தூர் - 2 ஆம் படை வீடு 




கந்தமாதன மலை அல்லது சந்தனமலைக்கு எஞ்சிய பகு‌தி‌யி‌ல் தூத்துக்குடிக்கு அருகே கடற்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். முருகன் தன்  தந்தையான சிவனை வழிபட்டு சூரபத்மனை வீழ்த்தி தீர்க்கமான வெற்றியை  பெற்ற இடத்தை இது நினைவு கூர்கிறது.


பழனி - 3 ஆம் படை வீடு 




பழனி மலை அடிவாரத்தில் திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமி எ‌ன்று அழைக்கப்படும் தெய்வம், பழனி மலை உச்சியில் தண்டாயுதபாணி தல விருட்சமாக தியான நிலையில் கையில் தடியை ஆயுதமாக ஏந்தியபடி இரு‌க்கு‌ம் முருக‌ன் கோவில். தெய்வீகப்பழம் காரணமாக முருக‌ன் குடும்பத்துடன் ஏற்பட்ட பகைக்குப் பிறகு இந்த மலை மீது அமர்ந்துதான், சாந்தியும், சமரசமும் அடைந்ததாகக் கூறப்படும் தலமாகும் இது.


சுவாமி மலை - 4 ஆம் படை வீடு 




கும்பகோணத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில்  அமைந்துள்ள இக்கோவில் செயற்கையான மலையில் கட்டப்பட்டுள்ளது. முருகன் தனது தந்தையான சிவனிடம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் சாரத்தை விளக்கியதாகக் கருதப்படும் நிகழ்வின் நினைவாக இக்கோயில் அமைந்துள்ளது.


பழமுதிர்ச்சோலை - 5 ஆம் படை வீடு




மதுரை அருகே அழகர் கோவில் மலைப் பகுதியில், நூபுரகங்கை என்று புனித நீரோடையுடன் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது பழமுதிர்ச்சோலை. இங்கு முருகன் தன் துணைவிகளான தேவசேனா மற்றும் வள்ளியுடன் காட்சியளிக்கிறார்.


திருத்தணி - 6 ஆம் படை வீடு 




சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருத்தணிதான் முருகப் பெருமானின் 6வது படை வீடாகும். தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் என்ற பெருமை கொண்டது இந்த திருத்தலம். வள்ளிப் பிராட்டியை முருகன் மணம் புரிந்தது இங்குதான். சூரபத்மனுக்கு எதிராக ஆவேசத்துடன் போர் புரிந்து அந்த உக்கிரத்தை இங்குதான் தணித்துக் கொண்டாராம் முருகன்.. அதன் பிறகு உள்ளத்தில் அமை‌தியை மீட்டெடுத்து, இங்கு வள்ளியை  மணந்ததாகக் கூறப்படுகிறது.


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா.. உள்ளம் உருக கேளுங்கள் மனம் இறங்குவான் முருகன்!!!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!!!

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்