- கவிஞர் க.முருகேஸ்வரி
சோறு தண்ணி இறங்க மறுத்து
பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து
நீ வரக் காத்திருந்து
நேரத்தை வீணடித்து
கவிதை என்ற பெயரில்
காகிதத்தை கசக்கி எறிந்து
தூக்கத்தைத் துரத்தி
தவியாய் தவிக்க விட்டு
இதயத்துடிப்பை எகிற விட்டு

நீ விட்டுப் போனாய் என்பதற்காக
இத்துப் போன பொருட்களை மறைத்து வைத்து
படிப்பையும் மூட்டை கட்டி
தாய் தந்தை அன்பை மறந்து
அண்ணன் தம்பி உறவைப் பிரிந்து
ஹார்மோனின் விளையாட்டு என்பதை அறியாமல்
அறிவுரைகள் ஏற்க மறுத்து
ஆட்டமாய் ஆடி
ஓட்டமாய் ஓடி
திக்கற்று தெருவில் நின்று
ஆயிரம் ஆயிரம் வேதனைகள் அனுபவித்து
கடைசியில் இத்தனை வலிகளையும்
சுகம் தான் என சொல்ல வைத்ததே
இந்தப் பாழாய் போன காதல்..!
காலம் கடந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இது காதல் படுத்தும் பாடு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
கவியும் நானும்
பொருத்தமோ பொருத்தம் MATCHING MATCHING .. ஒரு நிமிடக் கதை (10)
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
{{comments.comment}}