- கவிஞர் க.முருகேஸ்வரி
சோறு தண்ணி இறங்க மறுத்து
பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து
நீ வரக் காத்திருந்து
நேரத்தை வீணடித்து
கவிதை என்ற பெயரில்
காகிதத்தை கசக்கி எறிந்து
தூக்கத்தைத் துரத்தி
தவியாய் தவிக்க விட்டு
இதயத்துடிப்பை எகிற விட்டு

நீ விட்டுப் போனாய் என்பதற்காக
இத்துப் போன பொருட்களை மறைத்து வைத்து
படிப்பையும் மூட்டை கட்டி
தாய் தந்தை அன்பை மறந்து
அண்ணன் தம்பி உறவைப் பிரிந்து
ஹார்மோனின் விளையாட்டு என்பதை அறியாமல்
அறிவுரைகள் ஏற்க மறுத்து
ஆட்டமாய் ஆடி
ஓட்டமாய் ஓடி
திக்கற்று தெருவில் நின்று
ஆயிரம் ஆயிரம் வேதனைகள் அனுபவித்து
கடைசியில் இத்தனை வலிகளையும்
சுகம் தான் என சொல்ல வைத்ததே
இந்தப் பாழாய் போன காதல்..!
காலம் கடந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
இது காதல் படுத்தும் பாடு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
CSK vs RCB: பிரித்து மேய்ந்த பட்டிதர்.. டிம் டேவிட்.. 250 ரன்களை எப்படித் துரத்தப் போகுது சிஎஸ்கே?
US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்
Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
ஏசு பாலன் வருகிறார்!
Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!
ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை
{{comments.comment}}