காதல் படுத்தும் பாடு!

Feb 19, 2026,04:56 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி 


சோறு தண்ணி இறங்க மறுத்து 

பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து 


நீ வரக் காத்திருந்து

நேரத்தை‌ வீணடித்து


கவிதை என்ற‌ பெயரில்

காகிதத்தை கசக்கி எறிந்து


தூக்கத்தைத் துரத்தி 

தவியாய் தவிக்க விட்டு 

இதயத்துடிப்பை எகிற விட்டு 




நீ விட்டுப் போனாய் என்பதற்காக

இத்துப் போன பொருட்களை மறைத்து வைத்து


படிப்பையும் மூட்டை கட்டி 

தாய் தந்தை அன்பை மறந்து 

அண்ணன் தம்பி உறவைப் பிரிந்து

ஹார்மோனின்‌ விளையாட்டு என்பதை அறியாமல் 


அறிவுரைகள் ஏற்க‌‌ மறுத்து 

ஆட்டமாய்‌ ஆடி

ஓட்டமாய்‌ ஓடி 

திக்கற்று தெருவில் நின்று 


ஆயிரம் ஆயிரம் வேதனைகள் அனுபவித்து 

கடைசியில் இத்தனை வலிகளையும்

சுகம் தான்‌ என சொல்ல வைத்ததே


இந்தப் பாழாய் போன காதல்..!


காலம்  கடந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் 


இது காதல் படுத்தும் பாடு!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்