Kilambakkam: விரைவில் மலிவு விலை உணவகம்.. ஏடிஎம் மையங்கள் வருது.. அமைச்சர் சேகர்பாபு

Feb 05, 2024,10:57 AM IST

சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு  பயன் தரும் வகையில் மலிவு விலை உணவகம் மற்றும்  ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.




இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல மாற்றங்களை தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் வெகு விரைவில் தரமான முறையில் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதரத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் திட்டமிடப்படாத திட்டங்களை இந்த ஆட்சியில் தான் திட்டமிட்டு பல பணிகளை செய்து வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். பேருந்து நிலையத்தில் 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதியை செய்துள்ளோம். 


வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் ஒன்று அல்ல 3, 4 அமைக்கப்படும். பல வங்கிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதை பரிசீலித்து நல்ல முறையில் பணி செய்பவர்களுக்கு ஏடிஎம் மையம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்