Kilambakkam: விரைவில் மலிவு விலை உணவகம்.. ஏடிஎம் மையங்கள் வருது.. அமைச்சர் சேகர்பாபு

Feb 05, 2024,10:57 AM IST

சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு  பயன் தரும் வகையில் மலிவு விலை உணவகம் மற்றும்  ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.




இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல மாற்றங்களை தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் வெகு விரைவில் தரமான முறையில் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதரத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் திட்டமிடப்படாத திட்டங்களை இந்த ஆட்சியில் தான் திட்டமிட்டு பல பணிகளை செய்து வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். பேருந்து நிலையத்தில் 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதியை செய்துள்ளோம். 


வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் ஒன்று அல்ல 3, 4 அமைக்கப்படும். பல வங்கிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதை பரிசீலித்து நல்ல முறையில் பணி செய்பவர்களுக்கு ஏடிஎம் மையம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்