- மஞ்சுளா தேவி
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 7நாளைக்கு மழை நீடிப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு காற்று சுழற்சிகள் உருவான நிலையில் , தற்போது வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின்னர் 27ஆம் தேதியி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் 26, 27 ,28 ,ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று மழை நிலவரம்:
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.
கேரளாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை ரத்து:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது .இதன் காரணமாக வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை உதகை டூ மேட்டுப்பாளையம் இடையே செல்லும் மலை ரயில் சேவையும், வரும் 30ஆம் தேதி உதகை டூ குன்னூர் இடையே செல்லும் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}