சென்னை: 12 வருட காத்திருப்புக்குப் பிறகு விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக் குழு. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியுள்ளது.
மதகஜராஜா திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அதே வேகத்தில் படமாக்கப்பட்டது. அப்பொழுதே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மதகஜராஜா திரைப்படம் அப்போது வெளியாகவில்லை. இதனால் படம் அப்படியே முடங்கிப் போனது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதகஜ ராஜா திரைப்படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களிடையே மீண்டும் படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று நூறு கோடி வசூலில் சாதனை படைத்தது. அதேபோல் சுந்தர் சி நடித்து வரும் கேங்கர்ஸ் திரைப்படமும் பல்வேறு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதனால் சுந்தர்.சியைத் தேடி பல தயாரிப்பாளர்களும் ஹீரோ வாய்ப்புகளுடன் அணுகி வருகிறார்களாம்.
இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கி மீண்டும் படத்தை வெளியிடுவதற்கான கிரீன் சிக்னலை படக் குழு கொடுத்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெமினி பிலிம் சர்க்யூட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சதீஷ், நிதின் சத்யா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதேபோல் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு, போன்றோரும் நடித்துள்ளனர். இது தவிர நடிகர் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், நடிகை சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
மதகஜராஜா திரைப்படத்தை சுருக்கமாக எம்ஜிஆர் எனவும் அழைத்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மதகஜராஜாவுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது விஷால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.. அதேசமயம், சந்தானத்தின் காமெடியை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}