சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அபராதம் செலுத்துவதாக தனி நீதிபதி முன் ஒப்புக்கொண்டு ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுள்ள நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக வாத்தைகளை விட, அது பெரிய பிரச்சினையானது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிஷாவும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவரும் மன்னித்து விட்டதாக டிவீட் போட்டார். இந்த நிலையில் மீண்டும் திரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் என்னுடைய பேட்டியை முழுசா பார்க்காமல் அவதூறாகப் பேசி விட்டனர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சதீஷ் குமார், பெண்கள் குறித்து பொது வெளியில் இப்படித்தான் பேசுவதா.. இப்படிப் பேசினால் அவர்கள் எதிர்த்துக் கருத்து கூறத்தானே செய்வார்கள். உண்மையில் திரிஷாதான் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இதுபோன்று செயல்படக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரதம் விதித்து, அவரது வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. இந்த அபராத தொகை இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்தி, அது குறித்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த தொகையை செலுத்த காலம் அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினர். தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிக்க மறுத்தனர். அந்த உத்தரவை திரும்ப பெற கோரி தனி நீதிபதி முன் அல்லது பணத்தை கட்ட முடியுமா முடியாதா என்று அவரிடமே தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}