போபால்: பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் ராணுவம் தலை வணங்கி நிற்கிறது என்று பேசியதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்டா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் தான் அப்படிப் பேசவில்லை என்றும் காங்கிரஸ் என் பேச்சை திரித்து கூறுகிறது என்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ஜபல்பூரில், சிவில் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவ்டா பேசும்போது, பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்டு பின்னர் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக் கொன்னறர். பெண்களை பிரித்து விட்டு ஆண்களை மட்டும் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் முன்பு அவர்கள் வீட்டு ஆண்களைக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடந்ததை நாடு அறியும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களை பழிவாங்கும் வரை இந்திய மக்கள் ஓயமாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பதிலடி தாக்குதல் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும், ராணுவமும், பிரதமரின் காலில் விழுந்து வணங்குகிறது. ராணுவத்தினருக்கு கை கொடுத்து பாராட்டுங்கள் என்று தேவ்டா கூறினார்.
இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பி விட்டது. தேவ்டாவின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. துணை முதலமைச்சரின் கருத்துக்கள் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், தேவ்டா உடனடியாக பதிலடி கொடுத்தார். அவர் பேசியதை காங்கிரஸ் வேண்டுமென்றே திரித்து விட்டதாக கூறினார். பிரதமர் மோடியின் கால்களில் ராணுவம் விழுந்து வணங்குவது போல் சித்தரிக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், அது உண்மை இல்லை என்று தேவ்டா திட்டவட்டமாக தெரிவித்தார். "பிரதமர் நரேந்திர மோடியின் பதில் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும் ராணுவத்தின் காலடியில் தலைவணங்குகிறது. தயவு செய்து அவர்களுக்கு ஒரு பெரிய கை கொடுங்கள்" என்றே தான் கூறியதாக தேவ்டா விளக்கியுள்ளார்.

சமீபத்தில்தான் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு அவர்களது சகோதரியைக் கொண்டே பதிலடி கொடுத்துள்ளது இந்தியா என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவரை கண்டித்தது. மேலும், ராணுவ அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து ராணுவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}