நான் ராணுவத்தைக் குறைத்துப் பேசினேனா?.. சர்ச்சையில் சிக்கிய மத்திய பிரதேச துணை முதல்வர்!

May 16, 2025,05:00 PM IST

போபால்: பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் ராணுவம் தலை வணங்கி நிற்கிறது என்று பேசியதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்டா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் தான் அப்படிப் பேசவில்லை என்றும் காங்கிரஸ் என் பேச்சை திரித்து கூறுகிறது என்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


ஜபல்பூரில், சிவில் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவ்டா பேசும்போது, பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்டு பின்னர் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக் கொன்னறர். பெண்களை பிரித்து விட்டு ஆண்களை மட்டும் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் முன்பு அவர்கள் வீட்டு ஆண்களைக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடந்ததை நாடு அறியும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களை பழிவாங்கும் வரை இந்திய மக்கள் ஓயமாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பதிலடி தாக்குதல் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும், ராணுவமும், பிரதமரின் காலில் விழுந்து வணங்குகிறது. ராணுவத்தினருக்கு  கை கொடுத்து பாராட்டுங்கள் என்று தேவ்டா கூறினார்.


இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பி விட்டது. தேவ்டாவின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. துணை முதலமைச்சரின் கருத்துக்கள் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், தேவ்டா உடனடியாக பதிலடி கொடுத்தார். அவர் பேசியதை காங்கிரஸ் வேண்டுமென்றே திரித்து விட்டதாக கூறினார். பிரதமர் மோடியின் கால்களில் ராணுவம் விழுந்து வணங்குவது போல் சித்தரிக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், அது உண்மை இல்லை என்று தேவ்டா திட்டவட்டமாக தெரிவித்தார். "பிரதமர் நரேந்திர மோடியின் பதில் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும் ராணுவத்தின் காலடியில் தலைவணங்குகிறது. தயவு செய்து அவர்களுக்கு ஒரு பெரிய கை கொடுங்கள்" என்றே தான் கூறியதாக தேவ்டா விளக்கியுள்ளார்.




சமீபத்தில்தான் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு அவர்களது சகோதரியைக் கொண்டே பதிலடி கொடுத்துள்ளது இந்தியா என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவரை கண்டித்தது. மேலும், ராணுவ அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து ராணுவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்