சென்னை: கோடைக்காலம் தற்போது துவங்கி விட்ட நிலையில், மெட்ராஸ் ஐ பாதிப்பு வழக்கத்தை விட 20% அதிகரித்துள்ளதாக கண் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோடை காலம் வந்துவிட்டாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும். குறிப்பாக மெட்ராஸ் ஐ தொற்று அதிகரிக்கும். இதனால் மக்கள் முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலையுடன் வெயில் கொளுத்துகிறது. இதனால் நோய் தொற்றும் அபாயம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கால நிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் வழக்கத்தை காட்டிலும் 20% அதிகரித்துள்ளது. அதாவது கண் விழியும் இமயம் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று தான் மெட்ராஸ் ஐ. இது எளிதாக பரவக்கூடிய தொற்று நோயாகும். இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்தாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தாலோ கண் நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும்.
இப்படிப்பட்ட மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் தொற்று சமீப காலமாகவே அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சவுந்தரி கூறியதாவது,
மெட்ராஸ் ஐ எளிதில் பரவக்கூடிய தொற்று நோயாகும். எனவே, இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
கடந்த சில வாரங்களாகவே மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}