கோவில்களில் உழவாரப் பணிகள்.. திட்டம் வகுக்க.. 2 வாரம் டைம் கொடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 24, 2024,09:43 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில், உழவார பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களில் தூய்மைப்பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள  அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரான கார்த்திகேயன் நேரில் ஆஜராகி, கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.




குறிப்பாக, திருக்கருங்குடி நாதர் திருக்கோவில், மருதநல்லூர், கும்பகோணம் கோவில், தெப்பக்குளங்கள், மகாபலிபுரத்தில் உள்ள  ஸ்தலசயன பெருமாள் கோவில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்காக புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.


இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவார பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.


அதே போல், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலம், 183 வைபவ ஸ்தலம், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆயவறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த  தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்