மதிமுகவுக்கு பம்பர சின்னம் கிடையாது.. சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் துரை வைகோ

Mar 27, 2024,05:45 PM IST

சென்னை: மக்களவை தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பர சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுயேச்சை சின்னத்தில் துரை வைகோ போட்டியிடவுள்ளார்.


மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.




இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும், மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் முடிவில் குறுக்கிட முடியாது என்று தெரிவித்த ஹைகோர்ட், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்