சென்னை: வேதாரண்யம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் ஓ.எஸ். மணியன் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனும், திமுக சார்பில் வேதரத்தினமும் நேருக்கு நேர் மோதினர். கடும் அனல் கிளப்பிய இந்தத் தேர்தலில் மணியன் வெற்றி பெற்றார். வேதரத்தினத்தை விட 12,329 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து வேதரத்தினம் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கியும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தியும் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக கொடுத்தும் மணியன் வெற்றி பெற்றதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார் வேதரத்தினம்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தண்டபாணி இன்று தீர்ப்பை அளித்தார். அப்போது குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய அவர் ஓ.எஸ்.மணியன் தேர்வு செல்லும் என்று உத்தரவிட்டார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}