வேதாரண்யம் தொகுதியிலிருந்து ஓ.எஸ். மணியன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் - ஹைகோர்ட்

Dec 22, 2023,11:24 AM IST

சென்னை: வேதாரண்யம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் ஓ.எஸ். மணியன் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனும், திமுக சார்பில் வேதரத்தினமும் நேருக்கு நேர் மோதினர். கடும் அனல் கிளப்பிய இந்தத் தேர்தலில் மணியன் வெற்றி பெற்றார். வேதரத்தினத்தை விட 12,329 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து வேதரத்தினம் வழக்குத் தொடர்ந்தார். 


அதில், மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கியும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தியும் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக கொடுத்தும் மணியன் வெற்றி பெற்றதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார் வேதரத்தினம்.




இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தண்டபாணி இன்று தீர்ப்பை அளித்தார். அப்போது குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய அவர் ஓ.எஸ்.மணியன் தேர்வு செல்லும் என்று உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்