சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மறைந்த ஜி.கே.மூப்பனார் உருவாக்கிய கட்சிதான் தமிழ் மாநில காங்கிரஸ். அக்கட்சி உருவானபோது அக்கட்சிக்கு சின்னமாக சைக்கிள் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தமாகா காலப் போக்கில் கரைந்து போய் விட்டது. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சித் தலைவரானார். ஆனால் கட்சியை நடத்த முடியாமல் அவர் இடையில் காங்கிரஸில் சேர்ந்து மாநிலத் தலைவராக செயல்பட்டார். பின்னர் அதிலிருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை உயிர்ப்பித்து நடத்தி வருகிறார்.
தொடர் தோல்விகள் காரணமாக கட்சியின் தேர்தல் சின்னம் தமாகாவுக்குக் கிடைக்கவில்லை. புதிய புதிய சின்னமே அக்கட்சிக்குக் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.வாசன். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}