ஹைகோர்ட்டை நாடிய ஜி.கே.வாசன்.. தமிழ் மாநில காங்கிரஸுக்குக் கிடைக்குமா "சைக்கிள்"?

Feb 21, 2024,06:09 PM IST

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


மறைந்த ஜி.கே.மூப்பனார் உருவாக்கிய கட்சிதான் தமிழ் மாநில காங்கிரஸ்.  அக்கட்சி உருவானபோது அக்கட்சிக்கு சின்னமாக சைக்கிள் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தமாகா காலப் போக்கில் கரைந்து போய் விட்டது. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சித் தலைவரானார். ஆனால் கட்சியை நடத்த முடியாமல் அவர் இடையில்  காங்கிரஸில் சேர்ந்து மாநிலத் தலைவராக செயல்பட்டார். பின்னர் அதிலிருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை உயிர்ப்பித்து நடத்தி வருகிறார்.


தொடர் தோல்விகள் காரணமாக கட்சியின் தேர்தல் சின்னம் தமாகாவுக்குக் கிடைக்கவில்லை. புதிய புதிய சின்னமே அக்கட்சிக்குக் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.




இதுதொடர்பாக ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.  அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும்  தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.வாசன். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,  பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட்டு  விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்