20 ஆண்டு கால போராட்டம்.. ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போராட்ட மீட்ட கவுண்டமணி!

Oct 08, 2024,06:03 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான இடத்தை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் மீட்டுள்ளார்.


தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஏன் வில்லனாகவும் கூட கலக்கியவர் கவுண்டணி. பல வருட காலம் முடி சூடா மன்னனாக திகழ்ந்த கவுண்டமணி கடந்த 20 வருடமாக ஒரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதில் அவருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.


கடந்த 1996ம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 5.45 கிரவுண்டு இடத்தை வாங்கினார் கவுண்டமணி. இந்த இடத்தில் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை அணுகிய கவுண்டமணி இதற்காக ரூ. 3.58 கோடி பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் கட்டுமானத்தை 2004ம் ஆண்டுடன் பாதியிலேயே நிறுத்தி விட்டு, அந்த இடத்தையும் கையகப்படுத்தி விட்டதாம்.




இதனால் அதிர்ச்சி அடைந்த கவுண்டமணி சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முழுமையாக பணத்தைக் கொடுத்த பிறகும் கட்டுமானத்தை நிறுத்தியது தவறு. மேலும் நிலமும் கவுண்டமணிக்கே சொந்தம் என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 2004ம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 1 லட்சம் என்று கணக்கிட்டு நஷ்ட ஈட்டையும் வழங்குமாறும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.


இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அபிராமி பவுண்டேஷன் அணுகியது. ஆனால் அங்கு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது நிலம் கவுண்டமணிக்கே சொந்தமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட் ஊழியர்கள், காவல்துறையினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்தை கவுண்டமணி தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டு பத்திரங்களை வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன.


தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 50 கோடியாகும் என்று கூறப்படுகிறது. இடத்தை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள கவுண்டமணி, தான் விரும்பியபடி இந்த இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவாரா அல்லது வேறு ஏதேனும் கட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்