சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்டதாக திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2014 ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில், தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விழாவுக்கு அப்போதைய அதிமுக அரசு அனுமதி மறுத்த நிலையில் தி.க துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் காவல்துறை அனுமதி மறுப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரசியல் சட்டப்பிரிவு 19உட்பிரிவு ஒன் படி அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று அப்போதைய நீதிபதி ஹரிபரந்தாமன் தீர்ப்பளித்தார் . அதனடிப்படையில் நடைபெற்ற நிகழ்வில் செய்த இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.இதை தட்டிக்கேட்ட திராவிடர் கழகத்தினர் 17 பேர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கடந்த 2017 இல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.கவை சார்ந்த கலைமணி உள்ளிட்ட 17 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி, நீதிமன்ற அனுமதியுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் அதன் பிறகு காவல்துறை மேல்முறையீட்டில் நிகழ்விற்கு தடை பெற்றதுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு தொண்டர்களை கலைந்துபோக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவுறுத்தியதின் அதன்படியில், அனைவரும் கலைந்து சென்றதாகவும், அப்போது இந்து முன்னணி மற்றும் சிவசேனா கட்சியினர் பெரியார் திடலுக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
அதை தட்டிக்கேட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ற அடிப்படையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் திராவிட கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}