தாலி அகற்றும் நிகழ்ச்சியின்போது வன்முறை.. 17 தி.க. தொண்டர்களுக்கு எதிரான வழக்கு ரத்து

Mar 06, 2024,02:27 PM IST

சென்னை:  கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்டதாக  திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


கடந்த 2014 ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில்,  தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விழாவுக்கு  அப்போதைய அதிமுக அரசு அனுமதி மறுத்த நிலையில் தி.க துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் காவல்துறை அனுமதி மறுப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 




அரசியல் சட்டப்பிரிவு 19உட்பிரிவு ஒன் படி  அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று அப்போதைய நீதிபதி ஹரிபரந்தாமன் தீர்ப்பளித்தார் . அதனடிப்படையில் நடைபெற்ற நிகழ்வில் செய்த இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.இதை தட்டிக்கேட்ட  திராவிடர் கழகத்தினர் 17 பேர் மீது   வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கடந்த 2017 இல்  குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.


இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  தி.கவை சார்ந்த கலைமணி உள்ளிட்ட 17 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு,   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  முன்பு விசாரணைக்கு வந்தது. 


அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி, நீதிமன்ற அனுமதியுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் அதன் பிறகு காவல்துறை மேல்முறையீட்டில்  நிகழ்விற்கு தடை பெற்றதுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு  தொண்டர்களை கலைந்துபோக  திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவுறுத்தியதின் அதன்படியில், அனைவரும் கலைந்து சென்றதாகவும், அப்போது இந்து முன்னணி மற்றும் சிவசேனா கட்சியினர் பெரியார் திடலுக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.


அதை  தட்டிக்கேட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ற அடிப்படையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் திராவிட கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்