ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய முடியாது.. சென்னை ஹைகோர்ட் மறுப்பு.. மனு தள்ளுபடி

Feb 06, 2025,03:28 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்,  இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தனது 46வது வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 14ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து டிசம்பர் 18ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 




ஈரோடு கிழக்கு தொகுதியில் எல்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வருகிற எட்டாம் தேதி வெளியாக உள்ளன. 


இந்நிலையில், உண்மை தகவலை மறைத்து மனு தாக்கல்  செய்தவர்களை, வேட்பாளர்களாக அறிவித்ததாகக் கூறி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகவல்களை மறைத்தவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர். மேலும், தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்