நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு

Jul 23, 2023,02:02 PM IST
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் சலசலப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை பதிவாளர் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும், கோர்ட்டுக்குள்ளும்,கோரட் வளாகத்திற்குள்ளும் வைக்கக் கூடாது.  இந்த உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதித்துறை நடுவர்கள், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆகியோர் கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அம்பேத்கர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகைப்படங்களை கோர்ட்டுக்குள் வைக்க பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும் இதை உயர்நீதிமன்றத்தின் ஃபுல் பெஞ்ச் நிராகரித்து விட்டது. எனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி படங்களைத் தவிர வேறு தலைவர்களின் படங்கள் கோர்ட் வளாகத்திற்குள் இருக்கக் கூடாது.



தலைமைப் பதிவாளரின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி என்பது சரியல்ல. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அம்பேத்கர் படங்களும் கோர்ட்டுகளில் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில்  உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்றுமாறு ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்