நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு

Jul 23, 2023,02:02 PM IST
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் சலசலப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை பதிவாளர் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும், கோர்ட்டுக்குள்ளும்,கோரட் வளாகத்திற்குள்ளும் வைக்கக் கூடாது.  இந்த உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதித்துறை நடுவர்கள், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆகியோர் கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அம்பேத்கர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகைப்படங்களை கோர்ட்டுக்குள் வைக்க பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும் இதை உயர்நீதிமன்றத்தின் ஃபுல் பெஞ்ச் நிராகரித்து விட்டது. எனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி படங்களைத் தவிர வேறு தலைவர்களின் படங்கள் கோர்ட் வளாகத்திற்குள் இருக்கக் கூடாது.



தலைமைப் பதிவாளரின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி என்பது சரியல்ல. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அம்பேத்கர் படங்களும் கோர்ட்டுகளில் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில்  உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்றுமாறு ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்