அதிமுகவின் அடையாளத்தை முற்றிலும் இழந்தார் ஓ.பி.எஸ்.!

Nov 07, 2023,04:00 PM IST

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையை இழந்த நிலையில் தற்போது அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதிகாரத்தையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இழந்துள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் பதவியிலும் இருந்து வந்தனர்.


ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகு அதிமுக யாருக்கு என்ற மோதலில் இருவரும் குதித்தனர். மாறி மாறி சட்டப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஒவ்வொன்றாக தோற்று வந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார் ஓ.பி.எஸ்.




எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.  அதில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 


இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


இதன் மூலம் அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் இழந்துள்ளார் ஓ.பி.எஸ்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்