சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையை இழந்த நிலையில் தற்போது அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதிகாரத்தையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இழந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் பதவியிலும் இருந்து வந்தனர்.
ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகு அதிமுக யாருக்கு என்ற மோதலில் இருவரும் குதித்தனர். மாறி மாறி சட்டப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஒவ்வொன்றாக தோற்று வந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. அதில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் இழந்துள்ளார் ஓ.பி.எஸ்.
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நா ளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
{{comments.comment}}