சென்னை: அதிமுக கொடி, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் கட்சி பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.
இதையடுத்து அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், மூல வழக்கின் உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்குமாறு ஓ.பி.எஸ் தரப்பு நீதிபதிக்குக் கோரிக்கை வைத்தது.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த மார்ச் 12ம் தேதி முடிவடைந்தது.வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.
இன்று இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவை நிரந்தரமாக்குவதாகவும், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த நிரந்தர தடை விதிக்ககப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் லோக்சபா தேர்தலில் எப்படியும் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று விடுவோம் என்று கூறி வந்தார் ஓ.பி.எஸ். கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் பேசி வந்தார். ஆனால் தற்போதையை தீர்ப்பு அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}