வெளுக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.. கவனமாக இருக்க மதுரை கலெக்டர் அறிவுரை!

Apr 16, 2024,10:24 AM IST

மதுரை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருவதால், உச்சிப் பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்என மதுரை மாவட்ட மக்களுக்கு  ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனை  சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.


மேலும் வெயிலின் தாக்கம்  படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.




மக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை  வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். நீர் சத்துக்கள் நிறைந்த பழச்சாறுகளை அருந்த வேண்டும். மேலும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்க கூடாது.


வெயில் காலங்களில் ஏற்படும் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும்1070 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்