வெளுக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.. கவனமாக இருக்க மதுரை கலெக்டர் அறிவுரை!

Apr 16, 2024,10:24 AM IST

மதுரை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருவதால், உச்சிப் பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்என மதுரை மாவட்ட மக்களுக்கு  ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனை  சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.


மேலும் வெயிலின் தாக்கம்  படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.




மக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை  வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். நீர் சத்துக்கள் நிறைந்த பழச்சாறுகளை அருந்த வேண்டும். மேலும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்க கூடாது.


வெயில் காலங்களில் ஏற்படும் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும்1070 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்