மதுரை: காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை; நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது? என்று உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்., 22ம் தேதி, 7 பேர் போதையில் ரகளை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கான்முகமது மீது போதையில் இருந்த ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார். இந்த வீடியோ இணைய பக்கங்களில் பரவி வைரலாகியது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும், இந்த சம்பவத்தில் காவல் துறையினர் உதவியுடன் தான் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருமுருகன் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் தனபால் ஆகியோர் அடங்கிய குழு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒத்தக்கடை பகுதியில் ரகளை ஈடுபட்ட நபர்கள் மது அருந்தி இருந்தனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும்,வழக்குகளும் எப்படி அதிகரிக்கும் என கேள்வி எழுப்பினர்.எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தொடர் கேள்விகளை எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை டிஜிபி போதை பொருள் கட்டுப்பாடு பிரிவு இயக்குனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. அதிபர் இப்ராகிம் ரைசி உள்ளிட்ட 8 பேரும் பலி?.. சோகத்தில் ஈரான்!
Friendship Marriage: காதலும் கிடையாது.. காமமும் கிடையாது.. ஜப்பானில் இப்படியும் கல்யாணம் நடக்குது!
சார்லஸ் மன்னரை விட பெரும் பணக்காரர்களான.. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், மனைவி அக்ஷதா மூர்த்தி
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!
3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்.. 21ம் தேதி 24 மாவட்டங்களில் சூப்பர் மழை.. வானிலை மையம்!
தோனி விக்கெட்டை வீழ்த்தியதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது - மைக்கேல் வாகன்
அந்தமானில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. 3 நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்தது!
வங்கக் கடலில் புயல் உருவாகப் போகிறது.. ஆனால் நம்மிடம் வராது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
மே 19 .. வளர்ச்சி தரும் வைகாசி வளர்பிறை ஏகாதசி.. பெருமாள் வழிபாடு நலம் தரும்!
{{comments.comment}}