தமிழக இளைஞர்களே.. மத்திய அரசு தேர்வுகளை அதிகம் எழுதுங்கள்.. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்

Jul 18, 2024,07:27 PM IST

மதுரை:  தமிழ்நாட்டிலே இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் சார்ந்த அலுவலர்கள் பணியில்  நியமிக்கப்படும்போது, மக்கள் அதிகமாக பயன்பெறுவார்கள். இதற்கு மத்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.


இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ: 


தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அன்பான வணக்கம். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது. இதை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அது சார்ந்த பல பிரச்சனைகளையும் கையில் எடுத்திருக்கின்றோம். கடந்த காலங்களில் குறிப்பாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க மறுப்பது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களின் தேர்வு மையம் நியமிப்பது. இந்தி முறையை திணிப்பது என பல காரணங்களை கடந்த காலங்களை எழுப்பி அதற்கு தீர்வு கண்டிருக்கிறோம்.




முன்பு மண்டல வாரியாக பணி நியமனம் இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றார்கள். அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் இருக்கின்ற ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்கள் இருந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை காரணம் காட்டி ஒரே தேசம், ஒரே தேர்வு என்ற அடிப்படையில் மண்டல வாரியாக முழுமையும் நிறுத்திவிட்டு, இப்பொழுது மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை மட்டுமே நடக்கிறது. அதனுடைய விளைவுகளை தமிழ்நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. தபால் அலுவலகத்திற்கு சென்றாலும், ரயில்வே அலுவலகத்திற்கு சென்றாலும், வங்கிக்கு சென்றாலும் பெரும்பாலும் தமிழ் தெரியாத அலுவலர்கள் இன்றைக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் நிரம்பி வழிகின்றனர்.


இந்த பின்னணிகளை எதிர்த்து மண்டல வாரியாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டு வருகிறோம். இந்த பின்னணியில் மத்திய தேர்வாணையம் இரண்டு தேர்வுகளை அறிவித்திருக்கிறது. ஒன்று Combined Graduate level தேர்வு. ஜூலை 24ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி. வருமானவரி, கலால், கணக்காயர் போன்ற துறைகளில் பணி நியமனங்கள் பெற முடியும். இன்னொன்று Multi Tasking staff. இதற்கு +2 கல்வித் தகுதி போதுமானது. எதிர்வரும் ஜூலை 31ம் தேதி விண்ணப்பத்திற்கான கடைசி நாள். இந்த 2 தேர்வுகளுக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


ஒரு பக்கம் மண்டல அளவிலான தேர்வுகள் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், இன்னொரு பக்கம் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் நாம் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருக்க கூடாது. தமிழ்நாடு அரசு  தேர்வுகளில் குறிப்பாக விஏஓ தேர்வுகளில் 24 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வருவதை நாம் செய்தி தாள்களில் வருவதை பார்க்கிறோம். அதற்கு நிகரான இந்த தேர்வுகளுக்கு சில லட்சங்களில் தான் விண்ணப்பங்கள் வருகின்றன. சிலர் ஆதங்கப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள். அந்த கவலை போக்கப்பட வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மிக அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். 


இந்த தேர்வுகளை தேர்ச்சி பெறுவது, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலே இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் சார்ந்த அலுவலர்கள் பணியில்  நியமிக்கப்படும்போது சேவை துறை சார்ந்த ஒன்றில் மக்கள் அதிகமாக பயன்பெறுவார். எனவே இந்த இரண்டு தேர்வுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்