ஆண்டாள் கோவில்.. சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவன் நான்.. வதந்திகளை நம்பாதீர்.. இளையராஜா

Dec 16, 2024,05:57 PM IST

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எதுவும் நடக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதவன் நான். விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.


ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்ற இளையராஜா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அர்த்த மண்டபத்தைத் தாண்டி அவர் செல்ல முயன்றபோது அவரை ஜீயர்களும் மற்றவர்களும் அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் படி அருகே நின்று தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.




இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதில் அர்த்த மண்டபத்திற்குள் இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கப்பட்டிருந்தது.


தற்போது இளையராஜாவே இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்