சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எதுவும் நடக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதவன் நான். விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்ற இளையராஜா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அர்த்த மண்டபத்தைத் தாண்டி அவர் செல்ல முயன்றபோது அவரை ஜீயர்களும் மற்றவர்களும் அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் படி அருகே நின்று தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதில் அர்த்த மண்டபத்திற்குள் இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கப்பட்டிருந்தது.
தற்போது இளையராஜாவே இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?
என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!
PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு
கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!
Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!
ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!
தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!
{{comments.comment}}