ஆண்டாள் கோவில்.. சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவன் நான்.. வதந்திகளை நம்பாதீர்.. இளையராஜா

Dec 16, 2024,05:57 PM IST

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எதுவும் நடக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதவன் நான். விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.


ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்ற இளையராஜா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அர்த்த மண்டபத்தைத் தாண்டி அவர் செல்ல முயன்றபோது அவரை ஜீயர்களும் மற்றவர்களும் அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் படி அருகே நின்று தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.




இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதில் அர்த்த மண்டபத்திற்குள் இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கப்பட்டிருந்தது.


தற்போது இளையராஜாவே இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்