சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எதுவும் நடக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதவன் நான். விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்ற இளையராஜா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அர்த்த மண்டபத்தைத் தாண்டி அவர் செல்ல முயன்றபோது அவரை ஜீயர்களும் மற்றவர்களும் அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் படி அருகே நின்று தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதில் அர்த்த மண்டபத்திற்குள் இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கப்பட்டிருந்தது.
தற்போது இளையராஜாவே இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}