மகா கும்பமேளாவில் விபரீதம்.. அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலர் உயிரிழந்ததாக தகவல்

Jan 29, 2025,11:06 AM IST

பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் நாடே பரபரப்பாகி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என பலரும் கும்பமேளாவில் குவிந்து வருகிறார்கள். 




பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட, பிரயாக்ராஜில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தை அமாவாசையான இன்று மட்டும் அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராட கிட்டத்தட்ட  10 கோடி பேர் பிரயாக்ராஜில் கூடி உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர். 


மகாகும்பமேளாவில் இதற்கு முன்பும் இது போல் பல முறை கூட்ட நெரிசல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1954 ல் நடந்த கும்பமேளாவின் போது புனித நீராட ஏராளமானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 300 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்