மகா கும்பமேளாவில் விபரீதம்.. அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலர் உயிரிழந்ததாக தகவல்

Jan 29, 2025,11:06 AM IST

பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் நாடே பரபரப்பாகி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என பலரும் கும்பமேளாவில் குவிந்து வருகிறார்கள். 




பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட, பிரயாக்ராஜில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தை அமாவாசையான இன்று மட்டும் அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராட கிட்டத்தட்ட  10 கோடி பேர் பிரயாக்ராஜில் கூடி உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர். 


மகாகும்பமேளாவில் இதற்கு முன்பும் இது போல் பல முறை கூட்ட நெரிசல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1954 ல் நடந்த கும்பமேளாவின் போது புனித நீராட ஏராளமானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 300 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்