மகா கும்பமேளாவில் விபரீதம்.. அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலர் உயிரிழந்ததாக தகவல்

Jan 29, 2025,11:06 AM IST

பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் நாடே பரபரப்பாகி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என பலரும் கும்பமேளாவில் குவிந்து வருகிறார்கள். 




பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட, பிரயாக்ராஜில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தை அமாவாசையான இன்று மட்டும் அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராட கிட்டத்தட்ட  10 கோடி பேர் பிரயாக்ராஜில் கூடி உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர். 


மகாகும்பமேளாவில் இதற்கு முன்பும் இது போல் பல முறை கூட்ட நெரிசல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1954 ல் நடந்த கும்பமேளாவின் போது புனித நீராட ஏராளமானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 300 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

அதிகம் பார்க்கும் செய்திகள்