பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் நாடே பரபரப்பாகி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என பலரும் கும்பமேளாவில் குவிந்து வருகிறார்கள்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட, பிரயாக்ராஜில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தை அமாவாசையான இன்று மட்டும் அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராட கிட்டத்தட்ட 10 கோடி பேர் பிரயாக்ராஜில் கூடி உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர்.
மகாகும்பமேளாவில் இதற்கு முன்பும் இது போல் பல முறை கூட்ட நெரிசல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1954 ல் நடந்த கும்பமேளாவின் போது புனித நீராட ஏராளமானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 300 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}